முகப்பு
இந்தியா

ஆன்லைன் சூதாட்டச் செயலி வழக்கு: நடிகர் ராணா விசாரணைக்கு ஆஜர்!

நடிகர் ராணா டகுபதி சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஆஜர்!

Updated On : 15 நவம்பர், 2025 at 1:24 PM
ராணா டகுபதி
பகிர்:

ஹைதராபாத்: ஆன்லைன் சூதாட்டச் செயலி வழக்கில், நடிகர் ராணா டகுபதி சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஆஜரானார்.

தெலங்கானாவில், ‘தெலங்கானா விளையாட்டுச் சட்டம், 2017-இன்’ கீழ், அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, சட்ட விரோத ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க, கண்காணிக்க தெலங்கானா மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது.

இதனிடையே, ராணா மட்டுமில்லாது வேறு சில திரைத்துறை, சமூக ஊடகப் பிரபலங்களும் சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்துதல் உள்பட அவற்றுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோத ஆன்லைன் சூதாட்டச் செயலி வழக்கில் ராணாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, தெலங்கானா சிஐடியின் ஏடிஜிபி மேற்பார்வையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு முன்பு ராணா சனிக்கிழமை(நவ. 15) ஆஜரானார்.

summary

Actor Rana Daggubati on Saturday appeared before the SIT in Telangana in connection with a case related to alleged promotion of an online betting app, police said.

முழு கட்டுரையைப் படிக்க →