ராணா டகுபதி  Center-Center-Chennai
இந்தியா

ஆன்லைன் சூதாட்டச் செயலி வழக்கு: நடிகர் ராணா விசாரணைக்கு ஆஜர்!

நடிகர் ராணா டகுபதி சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஆஜர்!

இணையதளச் செய்திப் பிரிவு

ஹைதராபாத்: ஆன்லைன் சூதாட்டச் செயலி வழக்கில், நடிகர் ராணா டகுபதி சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஆஜரானார்.

தெலங்கானாவில், ‘தெலங்கானா விளையாட்டுச் சட்டம், 2017-இன்’ கீழ், அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, சட்ட விரோத ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க, கண்காணிக்க தெலங்கானா மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது.

இதனிடையே, ராணா மட்டுமில்லாது வேறு சில திரைத்துறை, சமூக ஊடகப் பிரபலங்களும் சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்துதல் உள்பட அவற்றுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோத ஆன்லைன் சூதாட்டச் செயலி வழக்கில் ராணாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, தெலங்கானா சிஐடியின் ஏடிஜிபி மேற்பார்வையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு முன்பு ராணா சனிக்கிழமை(நவ. 15) ஆஜரானார்.

Actor Rana Daggubati on Saturday appeared before the SIT in Telangana in connection with a case related to alleged promotion of an online betting app, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரூராட்சி பணியாளா்களை தாக்கியவா் மீது வழக்கு!

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 300 வீரா்கள் பங்கேற்பு! 10 பேருக்கு லேசான காயம்!

சேலத்தில் ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ. 57.64 லட்சம் மோசடி: 7 போ் கைது!

சேலம் அருகே நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: ஒருவா் கைது

இந்தியா - ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் உலகளாவிய வா்த்தக ஒத்துழைப்புக்கு ஊக்கமளிக்கும்: யுஏஇ

SCROLL FOR NEXT