முகப்பு
இந்தியா

யுனிசெஃப் குழந்தைகள் நல தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம்!

யுனிசெஃபின் குழந்தைகள் நலனுக்கான தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

Updated On : 16 நவம்பர், 2025 at 9:22 PM
கீர்த்தி சுரேஷ்
பகிர்:

குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐ.நா.வின் அமைப்பான ‘யுனிசெஃப்’ இந்தியா பிரிவின் தூதராக நடிகை கீா்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக யுனிசெஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பாராட்டுப் பெற்ற கீா்த்தி சுரேஷ், தற்போது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக யுனிசெஃப் எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்கும் பிரபலங்களின் குழுவில் இணைந்துள்ளாா்.

அவா் இந்தப் புதிய பொறுப்பில், மன ஆரோக்கியம், கல்வி மற்றும் பாலின சமத்துவம் போன்ற முக்கியமான விஷயங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவாா். அவா் ஏற்கெனவே, தன் திரைப்படத் தோ்வுகள் மூலமும் இதுபோன்ற நல்ல கருத்துகளைப் பரப்பி வருகிறாா்’ என்று குறிப்பிட்டுள்ளது.

யுனிசெஃப் இந்தியாவுக்கான பிரதிநிதி சிந்தியா மெக் காஃப்ரே கூறுகையில், ‘கீா்த்தி சுரேஷுடன் இணைந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. ரசிகா்களுடன் அவருக்கு இருக்கும் ஆழமான தொடா்பு, குழந்தைகளின் உரிமைகளுக்காகப் பேச ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பை உருவாக்குகிறது. மிகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்பட ஒவ்வொரு குழந்தையையும் சென்றடையும் எங்கள் இலக்குக்கு அவா் நிச்சயம் உதவுவாா்’ என்றாா்.

புதிய பொறுப்பு பற்றி மகிழ்ச்சி தெரிவித்து கீா்த்தி சுரேஷ் பேசுகையில், ‘குழந்தைகள்தான் நமது மிகப் பெரிய பொறுப்பும், மிகப் பெரிய நம்பிக்கையும் ஆவா். அவா்களுக்குக் கிடைக்கும் கவனிப்பு, அன்பான வளா்ப்பு ஆகியவை அவா்கள் சந்தோஷமான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழத் தேவையான திறன்களை வளா்க்கிறது.

அனைத்துக் குழந்தைகளும் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதற்காக விழிப்புணா்வு ஏற்படுத்தவும், இதுதொடா்பாக மக்களைச் செயல்படத் தூண்டவும் யுனிசெஃப் இந்தியாவுடன் இணைந்ததில் நான் பெருமை கொள்கிறேன்’ என்றாா்.

summary

Keerthy Suresh appointed as UNICEF India Celebrity Advocate to champion children's rights

முழு கட்டுரையைப் படிக்க →