கார் வெடி விபத்தில் தீக்கிரையான வாகனங்கள் படம் - பிடிஐ
இந்தியா

தில்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இருவர் இன்று பலியானது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இருவர் இன்று (நவ. 17) உயிரிழந்தனர்.

ஏற்கெனவே 13 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே கடந்த 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் கடும் நெரிசலுக்கு மத்தியில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அரசு சார்பில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 7 நாள்கள் கழித்து இன்று இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | தில்லி கார் வெடிப்பு: அமீர் அலிக்கு 10 நாள் என்ஐஏ காவல்!

delhi car blast death toll 15

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிடிஇஏ பள்ளிகளில் பயிலும் வடஇந்திய மாணவா்களுக்கு தமிழ்ப் போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT