டாக்கா, வங்கதேசத்தின் பிற பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலில்,
இன்று காலை டாக்கா மற்றும் வங்கதேசத்தின் பிற பகுதிகளில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கு டாக்காவின் வடகிழக்கு புறநகரில் ஏற்பட்டதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். இது 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் இதுவரை எந்த சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை இருப்பினும், நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இது அங்குள்ள குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.