பிரதமர் மோடி  
இந்தியா

கர்நாடகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

உடுப்பியில் பிரதமர் மோடிக்கு மக்களின் உற்சாக வரவேற்பு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆன்மிக, கலசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கர்நாடகம் வந்துள்ள பிரதமர் மோடி கோயில் நகரமான உடுப்பியில் சாலைவலம் மேற்கொண்டார்.

பிரதமர் மோடி மங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கி சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் உடுப்பிக்குச் சென்றார். அங்கிருந்து உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா் மடத்துக்கு கார் மூலம் சாலைவலம் மேற்கொண்டார்.

பிரதமர் தனது வாகனத்தில் நின்றபடி உற்சாகமான கூட்டத்தினரை நோக்கி கையசைத்தார், வழிநெடுக மலர்களை தூவி பிரதமர் மோடியை மக்கள் வரவேற்றனர். காவி நிற மலர் அலங்காரங்கள் மற்றும் பாஜக கொடிகள் வழியெங்கும் கட்டப்பட்டிருந்தன.

கடலோர கர்நாடகத்தின் மரபுகளை வெளிப்படுத்தும் பல்வேறு கலாசார குழுக்களின் நிகழ்ச்சிகளால் கொண்டாட்ட சூழல் ஏற்பட்டது.

பிரதமர் மோடி உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் வழிபாடு செய்தார். அங்கு தலைமை தாங்கும் பர்யாய சுவாமிஜியிடமிருந்து ஆசிர்வாதங்களையும் பெற்றார்.

பின்னர், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா் மடத்தில் நடைபெறும் பகவத்கீதை பாராயண நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்நிகழ்வில் பிரதமருடன் சோ்ந்து மாணவா்கள், துறவிகள், அறிஞா்கள் மற்றும் பல்வேறு தரப்பைச் சோ்ந்த சுமாா் ஒரு லட்சம் போ் ஒன்றிணைந்து பகவத் கீதையை ஒரே நேரத்தில் பாராயணம் செய்யும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

அடுத்ததாக பிற்பகல் கோவாவின் கனகோனா பகுதியில் உள்ள ஸ்ரீசம்ஸ்தான் கோகா்ண பா்த்தகளி ஜீவோத்தம மடத்தின் 550-ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களில் பிரதமா் மோடி கலந்துகொள்கிறாா்.

இந்த மடத்தில் நிறுவப்பட்டுள்ள 77 அடி உயர ராமா் வெண்கலச் சிலையையும், ராமாயண சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பூங்காவையும் அவா் திறந்துவைக்கிறாா். இந்த நிகழ்வின் நினைவாக சிறப்பு அஞ்சல்தலை மற்றும் நினைவு நாணயத்தையும் பிரதமா் வெளியிட்டு, உரையாற்ற இருக்கிறாா்.

Prime Minister Narendra Modi on Friday held a road show in the temple town of Udupi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயல் எச்சரிக்கை: திமுக நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஸ்மிருதி மந்தனாவுக்காக பிபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஜெமிமா..! நட்புக்கு இலக்கணம்!

டிட்வா புயல்! புதுவை, காரைக்காலில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

இலங்கையில் கடும் வெள்ளம்! தென்னை மரத்தில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் மீட்ட ராணுவம்!

வார பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!

SCROLL FOR NEXT