நிவாரண பொருள்கள் 
இந்தியா

விமானப் படை விமானம் மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்!

இலங்கைக்கு விமானப் படை விமானம் மூலம் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கடுந்துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை இந்திய விமானப் படை விமானம் இன்று காலை கொண்டு சேர்த்துள்ளது.

சி130 ரக விமானம், மக்களுக்குத் தேவையான அடிப்படை உணவு உள்ளிட்ட பொருள்கள், கொழும்புவின் பண்டரநாயக்கே சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகாலை 1.30 மணிக்குக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படை அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள், நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொண்டனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, இலங்கையில் கனமழை பெய்து, அதனால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 69 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வந்த 34 பேரின் கதி என்ன என்று இதுவரை தெரியவரவில்லை.

இந்த பேரிடரில், 61 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக பல இடங்கள் தொடர்புகொள்ள முடியாத வகையில் துண்டிக்கப்பட்டுள்ளன.

கண்டி பகுதியில் மட்டும், மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

An Indian Air Force aircraft carrying emergency relief material for those displaced by unprecedented floods arrived in Sri Lanka early on Saturday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

ஒரு ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT