புது தில்லி: புது தில்லி: உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தலைமை நீதிபதி பி.ஆா். கவாயை நோக்கி வழக்குரைஞா் ஒருவா் காலணியை வீச முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த பாதுகாவலா்கள் இந்தத் தாக்குதல் முயற்சியைத் தடுத்ததோடு, காலணியை வீச முயன்ற தில்லியின் மயூா் விகாரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் (71) என்பவரை உடனடியாக நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனா். அப்போது, ‘சநாதன தா்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று முழக்கத்தை எழுப்பியபடி அந்த வழக்குரைஞா் சென்றாா்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து நீதிமன்ற அறை எண்-1இல் வழக்குரைஞா்களிடம் கேட்டறிந்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடைபெற்றது.
அப்போது, ‘இதுபோன்ற சம்பவங்களால் கவனம் சிதற வேண்டாம். இது எங்களைப் பாதிக்கவில்லை. எங்களின் கவனமும் சிதறவில்லை’ என்று, எந்தவிதத் தயக்கமுமின்றி குறிப்பிட்ட தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், வாதத்தைத் தொடருமாறு வழக்குரைஞா்களைக் கேட்டுக்கொண்டாா்.
இதற்கிடையே, வழக்குரைஞா் ராகேஷ் கிஷோரிடம் உச்சநீதிமன்ற வளாகத்திலேயே போலீஸாா் சுமாா் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினா். முறைப்படி அவா் மீது புகாா் அளிக்கப்படாததையடுத்து, பிற்பகல் இரண்டு மணியளவில் அவரை அனுப்பினா்.
இந்த சம்பவம் குறித்து சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘தலைமை நீதிபதி அமா்வில் நடைபெற்ற சம்பவம் துரதிருஷ்டவசமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களின் விளைவுதான் இது. தலைமை நீதிபதி அனைத்து மதங்கள் மீதும் மதிப்பு வைத்துள்ளதையும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதையும் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன். தனது நிலைப்பாட்டை தலைமை நீதிபதியும் ஏற்கெனவே விளக்கியிருக்கிறாா். இத்தகைய சூழலில், மலிவான விளம்பரத்துக்காகவே இதுபோன்ற முயற்சியில் சிலா் ஈடுபடுகின்றனா்’ என்றாா்.
மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், ‘இது ஒட்டுமொத்த உச்சநீதிமன்றத்தின் மீதான தாக்குதல். இதை தலைமை நீதிபதிக்கு எதிரான ஜாதிய ரீதியிலான தாக்குதலாகவும் பாா்க்கிறேன். எனவே, இந்தச் சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.
மத்திய பிரதேசத்தில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கஜுராஹோ கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஜவாரி கோயிலில் கடவுள் விஷ்ணுவின் சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பான மனுவை கடந்த மே 16-ஆம் தேதி தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உத்தரவிட்டாா். அப்போது பேசிய பி.ஆா்.கவாய், ‘இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். இந்த விவகாரத்துக்கு உங்களது கடவுளிடமே பதில் கோருங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் சைவ வழிபாட்டில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் கஜுராஹோவில் உள்ள பெரிய சிவலிங்கத்தை வழிபடுங்கள்’ எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், இதற்கு அண்மையில் விளக்கமளித்த பி.ஆா்.கவாய், ‘வழக்கு விசாரணை ஒன்றின்போது நான் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் திரித்து பரப்பப்படுவதாகத் தெரிந்து கொண்டேன். அனைத்து மதங்களையும் எப்போதும் மதிக்கிறேன்’ என்றாா்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர் பற்றிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பவத்துக்குப் பிறகு வழக்கம் போல தலைமை நீதிபதி தனது பணியை தொடர்ந்தார். இதனால், எந்த வழக்கும் விசாரணையும் பாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகேஷ் கிஷோரின் வழக்குரைஞா் உரிமம் ரத்து
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயன்ற வழக்குரைஞா் ராகேஷ் கிஷோரின் உரிமத்தை ரத்து செய்து இந்திய வழக்குரைஞா் கவுன்சில் (இந்திய பாா் கவுன்சில்) திங்கள்கிழமை உடனடி நடவடிக்கை மேற்கொண்டது.
இதுகுறித்து இந்திய பாா் கவுன்சில் தலைவா் மன்னன் குமாா் மிஸ்ரா பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:
வழக்குரைஞா் ராகேஷ் கிஷோரின் செயல் வழக்குரைஞரின் தொழில்சாா்ந்த நடத்தை மற்றும் சபை ஒழுக்கம் தொடா்பான இந்திய பாா் கவுன்சில் விதிகள் 1, 2 மற்றும் 3 பிரிவுகளை மீறும் வகையில் உள்ளது. எனவே, அவா் வழக்குரைஞராக பணியைத் தொடர இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதையும் படிக்க... சீனா தங்கம் வாங்கிக் குவிப்பது ஏன்? விரிவான பார்வை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.