முகப்பு
இந்தியா

பிகாரில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் இத்தனை பேரா?

பிகாரில் இரண்டு கட்டங்களாக நவம்பரில் தேர்தல்...

Updated On : 6 அக்டோபர், 2025 at 6:21 PM
வயது முதிர்ந்த பெண் வாக்காளர் ஒருவர் வாக்குச்சாவடியிலிருந்து... | கோப்பிலிருந்து படம் - Center-Center-Chennai
பகிர்:
Updated On : 6 அக்டோபர், 2025 at 6:01 PM

பிகாரில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பிகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவ. 22, 2025-இல் நிறைவடைகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த நிலையில், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று(அக். 6) அறிவித்தது. அதன்படி, நவம்பர் 6, 11 ஆகிய இரு வேறு தேதிகளில் மொத்தம் இரண்டு கட்டங்களாக பிகாரில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Updated On : 6 அக்டோபர், 2025 at 6:09 PM

பிகார் தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து இன்று(அக். 6) செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பில் ஈடுபட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிகாரில் இந்தத் தேர்தலில் 14 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 3.92 கோடி ஆண், 3.50 கோடி பெண் வாக்காளர்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 7.42 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்றார்.

Advertisement

அவர்களுள் 100 வயதைக் கடந்தவர்கள் 14,000 பேர் என்ற தகவலையும் அவர் பகிர்ந்தார். பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளையும் உள்ளடக்கி இந்தத் தேர்தலில் மொத்தம் 90,712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Bihar elections; 14,000 voters are over the age of 100 years, 14 lakh first time voters: CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.