முகப்பு
இந்தியா

பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம்

பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம்

Updated On : 6 அக்டோபர், 2025 at 5:08 PM
- PTI
பகிர்:

பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதை தேர்தல் ஆணையம் இன்று(அக். 6) அறிவித்தது. அதன்படி, நவம்பர் 6-இல் முதல்கட்ட வாக்குப்பதிவு, நவம்பர் 11-இல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.

பிகாரில் முதல்முறை வாக்காளர்கள் 14 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 7.42 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தயாராக உள்ளனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்காக பிகார் தேர்தலையொட்டி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு 10 நாள்களுக்கு முன் வரை, வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவ. 10-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவ. 13-ஆம் தேதியும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

People can still get add their names to voter lists till 10 days before the filing of nomination papers by candidates: CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.