முகப்பு
தமிழ்நாடு

துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புரளி எனத் தகவல்

Updated On : 17 அக்டோபர், 2025 at 9:10 AM
சி.பி. ராதாகிருஷ்ணன்
பகிர்:

சென்னையில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புரளி எனக் கண்டறியப்பட்டது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வீட்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி-யின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, உடனடியாக சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் வீட்டில் பெருநகர சென்னை காவல்துறையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவுகளும் சோதனை நடத்தினர்.

இருப்பினும், சோதனையின் முடிவில் புரளி எனத் தெரிய வந்தது.

இதையும் படிக்க: கல்லூரி கழிப்பறையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! மாணவர் கைது!

summary

Bomb threat at Vice President CP Radhakrishnan's Chennai home found hoax

முழு கட்டுரையைப் படிக்க →