முகப்பு
இந்தியா

தீவிர புயலாக வலுப்பெற்றது மோந்தா!

மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது பற்றி...

Updated On : 28 அக்டோபர், 2025 at 7:32 AM
வானிலை ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்
பகிர்:

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோந்தா புயல் உருவானது.

ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் மோந்தா, ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தீவிரப் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தரைகாற்று வீசக்கூடும். இப்புயல் கரையைக் கடந்த பின்னா் படிப்படியாக வலுவிழந்துவிடும்.

இந்த நிலையில், தற்போது ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடற்கரைகளில் பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மழையும் தீவிரமடைந்துள்ளது.

summary

Cyclone Montha intensifies into a severe cyclonic storm

முழு கட்டுரையைப் படிக்க →