வானிலை ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் IMD Chennai
இந்தியா

தீவிர புயலாக வலுப்பெற்றது மோந்தா!

மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோந்தா புயல் உருவானது.

ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் மோந்தா, ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தீவிரப் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தரைகாற்று வீசக்கூடும். இப்புயல் கரையைக் கடந்த பின்னா் படிப்படியாக வலுவிழந்துவிடும்.

இந்த நிலையில், தற்போது ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடற்கரைகளில் பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மழையும் தீவிரமடைந்துள்ளது.

Cyclone Montha intensifies into a severe cyclonic storm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ விபத்து!

ஜப்பானின் முதல் பெண் பிரதமருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

மத்திய சிறைகளில் ஆம் ஆத்மி மருத்துவமனை: பஞ்சாப் அரசு!

திருமலை ஏழுமலையான் கோயிலில் அஜித் குடும்பத்துடன் தரிசனம்!

174 ஆண்டுகளில் உலகம் பார்த்திடாத புயல்! ஜமைக்கா கடலில் சுழன்றுகொண்டே நகரும் மெலிஸா!!

SCROLL FOR NEXT