மோந்தா புயல் PTI
இந்தியா

வலுவிழந்த மோந்தா புயல்: மேற்கு வங்கத்தில் கனமழை!

மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

இணையதளச் செய்திப் பிரிவு

மோந்தா தீவிர புயலாக நேற்றிரவு கரையைக் கடந்த நிலையில், மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக வலுப்பெற்ற மோந்தா புயல் ஆந்திரத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை இரவு கரையைக் கடந்தது.

வானிலை அமைப்பு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகப் பலவீனமடைவதால் தெற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தெற்கு 24 பர்கானாஸ், பூர்பா மற்றும் படஸசிம் மேதினிபூர், ஜார்கிரா ஆகிய பகுதிகளில் இன்று 7 முதல் 11 செ.மீ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பிர்பும், முர்ஷிதாபாத, பூர்பா பர்தாமன் மற்றும் புருலியா மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடக்கு வங்கான மாவட்டங்களான டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி, கூச்பெஹார் மற்றும் அலிப்பூர்துவார் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை (7 முதல் 20 செ.மீ) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மால்டா, உத்தர் மற்றும் தக்ஷின் தினாஜ்பூர் உள்ளிட்ட வடக்கு வங்காள மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு வங்க கடற்கரையோரத்திலும் அதற்கு அப்பாலும் மீனவர்கள் வியாழக்கிழமை வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Heavy rain is likely in several districts of West Bengal till Friday as cyclone Montha gradually loses intensity following landfall, the IMD said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்ருட்டி நகராட்சியில் அடிப்படை கட்டமைப்புகள் மேலும் மேம்படுத்தப்படும்: நகா்மன்றத் தலைவா் ராஜேந்திரன்

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: 21 கலசங்கள் பொருத்தம்

தேரூா் பேரூராட்சி தலைவியாக அமுதாராணி மீண்டும் பொறுப்பேற்பு

களக்காடு வழித்தடத்தில் 15 அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

கந்தசஷ்டி விழா: அக்கமாபேட்டை சுப்பிரமணியா் கோயிலில் ஊஞ்சல் உற்சவ சேவை

SCROLL FOR NEXT