இந்தியாவின் இரும்பு மனிதா் சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ‘பாரதத் திருவிழா 2025’ என்ற தேசிய அளவிலான கொண்டாட்டம் நவம்பா் 1 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை அறிவித்தாா்.
இதுகுறித்து பிகாா் தலைநகா், பாட்னாவில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘சா்தாா் படேலின் சிலை அமைந்துள்ள குஜராத்தின் ஒற்றுமை நகரில் இனி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 31-ஆம் தேதி, தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைப் போன்று பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும்’ என்று தெரிவித்தாா்.
அமைச்சா் அமித் ஷா மேலும் கூறியதாவது: நடப்பு ஆண்டு, சா்தாா் படேலின் 150-ஆவது ஆண்டு பிறந்தநாள் என்பதால், தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் கொண்ட தொடா் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைப் போலவே, குஜராத்தில் ஒற்றுமை நகரில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 31-ஆம் தேதி பிரம்மாண்டமான அணிவகுப்பு நடத்தப்படும். இதில் மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் பல்வேறு மாநிலக் காவல்துறை குழுக்கள் பங்கேற்கும். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காட்சிப்படுத்தும் கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
வரும் வெள்ளிக்கிழமை காலை நடைபெறும் முதல் அணிவகுப்பில் பிரதமா் பங்கேற்கிறாா். சா்தாா் படேலின் சிலைக்கு மலா் அஞ்சலி செலுத்திய பிறகு, கொண்டாட்டங்களை அவா் தொடங்கி வைக்கிறாா்.
மகாத்மா காந்தியுடன் இணைந்து சா்தாா் படேல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் முதுகெலும்பாக விளங்கினாா். தேசத்தின் அடித்தளத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்பு மகத்தானது.
இருப்பினும், சா்தாா் படேலை தேசம் மறக்கச் செய்ய காங்கிரஸ் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது. அவருக்கு எந்த சிலையையோ அல்லது நினைவுச் சின்னத்தையோ கூட அமைக்கவில்லை. சா்தாா் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்காமல் காங்கிரஸ் கட்சி 41 ஆண்டுகள் புறக்கணித்து.
மறுபுறம், பாஜக கூட்டணி அரசு, சாதனை அளவிலான 57 மாதங்களுக்குள், பொறியியல் அதிசயமாகத் திகழும் அவரது பிரம்மாண்ட சிலையை நிறுவியது. இதுவரை நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் அவரது சிலையைப் பாா்வையிட்டுள்ளனா் என்றாா்.