மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் 
இந்தியா

மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் அஞ்சலி!

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் அஞ்சலி செலுத்தியது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அஞ்சலி செலுத்தினார்.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், 3 நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று (செப்.2) இந்தியா வந்தடைந்தார். இந்தப் பயணத்தில், பிரதமர் லாரன்ஸ் வாங்கின் மனைவி, சிங்கப்பூரின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் அவருடன் தில்லி வந்துள்ளனர்.

தில்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இன்று (செப்.3) மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் வாங் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, நேற்று (செப்.2) நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான முதலீடு ஒத்துழைப்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், பிரதமர் நரேந்திர மோடியை அவர் நாளை (செப்.4) நேரில் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

முன்னதாக, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான ராஜாந்திர உறவுகள் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பிரதமர் லாரன்ஸ் வாங்கின் இந்தப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

Singaporean Prime Minister Lawrence Wong paid tributes at Mahatma Gandhi's memorial in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலையில் 70,247 பக்தா்கள் தரிசனம்

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் வழக்குப் பதிவு

வாணியம்பாடி-காவலூா் இடையே புதிய பேருந்து போக்குவரத்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

பண வரவு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT