கோப்புப் படம் 
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ராம்பன் மாவட்டத்தின் சும்பெர் கிராமத்தைச் சேர்ந்த, நிறைமாத கர்பிணியான அக்தெரா பானோ (வயது 21), ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக தனது கணவருடன் ரயிலில் சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு அந்த ரயிலில் செல்லும் வழியிலேயே திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரயிலில் இருந்த பயணிகள் இருவர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஓடும் ரயிலிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதில், ரயில்வே பணியாளர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் அவருக்கு உதவி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அந்த ரயிலானது பனிஹல் ரயில் நிலையத்தை அடைந்தவுடன், அங்கு அவரை அவசர ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அக்தெராவுக்கும் அவரது குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் தற்போது நலமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பஞ்சாப் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

A woman has given birth to a baby boy on a moving train in Jammu and Kashmir's Ramban district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

SCROLL FOR NEXT