மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்  
இந்தியா

ஜிஎஸ்டி மாற்றம் நுகர்வோருக்கு முழு பலன்களை உறுதிசெய்யும்: கோயல்

ஜிஎஸ்டி பலன்கள் முழுமையாக நுகர்வோருக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்..

இணையதளச் செய்திப் பிரிவு

ஜிஎஸ்டி பலன்கள் முழுமையாக நுகர்வோருக்குச் சென்றடைவதை உறுதி செய்ய மத்திய அரசு விழிப்புடன் இருக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ரொட்டி முதல் ஹேர் ஆயில், ஐஸ்கிரீம்கள் மற்றும் டிவிக்கள் வரை அனைத்து பொதுவான பயன்பாட்டுப் பொருள்களின் விலையும் குறைக்கப்படும் என்றும் அதே நேரத்தில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான வரி விகிதம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்றும் புதன்கிழமை ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது. இது நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரவுள்ளது.

இதுதொடர்பாக பாஜக செய்தியார்களிடம் பேசிய கோயல்,

இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்க அமெரிக்கா எடுத்த முடிவு மோடி அரசை ஜிஎஸ்டி மாற்றியமைக்க தூண்டியிருக்கலாம் என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்தை அவர் நிராகரித்தார். ஏனெனில் இந்த முடிவு மாநிலங்கள், மத்திய செயலாளர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் கிட்டத்தட்ட ஒரு வருட கால ஆலோசனை செய்யப்பட்டதன் விளைவாகும் என்று அவர் கூறினார்.

ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்பட்டது எந்த நாட்டின் முடிவோடும் தொடர் இல்லை. இவ்வளவு பெரிய மாற்றம் ஒரே இரவில் நடக்காது, அமெரிக்காவின் முடிவு கடந்த மாதம்தான் எடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட்டார்.

குறைக்கப்பட்ட வரிகளின் முழுப் பலன்களையும் நுகர்வோர் பெறுவதை உறுதிசெய்ய மத்திய அரசு விழிப்புடன் இருக்கும் அதே வேளையில், மாநிலங்களும் அதைக் கண்காணிக்க வேண்டும் என்றார்.

ஜிஎஸ்டி தாமதமாக மாற்றியமைக்கப்பட்டதற்கு காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்திய அரசை சாடிய நிலையில், 2004-14 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் ஊழலில் மட்டுமே ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல ஏவுகணை முயற்சிகள் இருந்தபோதிலும் புறப்பட முடியாத ஒரு ராக்கெட் போன்றவர், முன்பு ஏதோ ஒரு விஷயத்தில் அவர் என்ன சொன்னார், இப்போது என்ன சொல்கிறார் என்பது அவருக்கே தெரியும், இவரது கருத்துகளால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதில்லை என்றார்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் விலையையும் குறைக்கும் மற்றும் தொழில்துறையின் ஒவ்வொரு துறைக்கும் பயனளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான சீர்திருத்தங்கள் என்று கோயல் பாராட்டினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட, மோடி அரசின் கீழ் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் வரி குறைவாகவே உள்ளது. அப்போது நுகர்வோர் மற்றும் தொழில்துறையினர் சிக்கலான வரி விதிப்புகளால் சுமையாக இருந்ததாகவும், ஊழல் செழித்ததாகவும் கூறப்படுகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு மறைமுக வரிவிதிப்பிலும் இவ்வளவு பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை என்று அவர் கூறினார்.

The Centre will keep vigil to ensure that the benefits of GST rationalisation are passed on fully to consumers, Union Minister Piyush Goyal said on Friday, stating that the industry has given him assurance that the entire fall in taxes on various items will be reflected in their prices.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!

இயக்குநர் பிறந்த நாள்! ஜனநாயகன் மேக்கிங் விடியோ!

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

SCROLL FOR NEXT