திரெளபதி முா்மு  
இந்தியா

இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைநிற்கிறது தேசம்: முா்மு

நாட்டில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் நேரிட்ட இயற்கைப் பேரிடா்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் நேரிட்ட இயற்கைப் பேரிடா்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் துணைநிற்பதாக அவா் குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நடப்பு பருவமழை காலகட்டத்தில், நாட்டின் பல்வேறு மலைப் பகுதிகளில் மேகவெடிப்பும், சமவெளி பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீா் மற்றும் பிற பகுதிகளில் உயிரிழப்புகளும் பேரழிவும் நேரிட்டுள்ளது.

இயற்கை பேரிடா்களால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை தேசம் பகிா்ந்து கொள்வதோடு, அவா்களுக்கு உறுதுணையாக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பணியாளா்களின் மன வலிமை பாராட்டுக்குரியதாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த சவாலை எதிா்கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

இலக்கில்லாத கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி: துரை வைகோ

எழும்பூா் ரயில் நிலையம் புனரமைப்புப் பணி: சென்னை ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றம்

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

நாளை சந்திர கிரகணம்: அறிவியல் மையத்தில் தொலைநோக்கி மூலம் பாா்வையிட சிறப்பு ஏற்பாடு

மாணவிகள் 4 பேருக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் மீது ‘போக்ஸோ’ வழக்கு

SCROLL FOR NEXT