ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை மருத்துவமனையில் திங்கள்கிழமை காலை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
51 வயதான பகவந்த் மான், செப்டம்பர் 5 ஆம் தேதி சோர்வு, குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, முதல்வர் பகவந்த் மானின் முக்கிய உடல் இயக்கங்கள் இயல்பாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக உடல்நலக் குறைவால் முதல்வர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே வியாழக்கிழமை பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் நேரில் பார்வையிட்டார். ஆனால் உடல்நிலை பிரச்னை காரணமாக முதல்வர் பகவந்த் மானால் அவருடன் செல்ல இயலவில்லை.
இந்த நிலையில், ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி, மொஹாலியின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பகவந்த் மானை சந்தித்து அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.