படம்: X / Chinar Corps - Indian Army 
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி கொலை! ராணுவ வீரர் காயம்!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் நடத்திய என்கவுன்ரில் பயங்கரவாதி ஒருவர் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

குல்காம் மாவட்டத்தில் உள்ள குட்டர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறையின் புலனாய்வுத் துறை அளித்த தகவலைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் தலைமையில் ஜம்மு - காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் இணைந்து தேடுதல் பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஈடுபட்டனர்.

அப்போது ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் இந்திய ராணுவத்தின் இளநிலை கமிஷண்டு அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A terrorist was killed in an encounter with security forces in Jammu and Kashmir on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழா்கள் ஆா்வம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT