காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 
இந்தியா

தோ்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்: காங்கிரஸ்

‘ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதற்காக தோ்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ‘ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதற்காக தோ்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.

இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களின் அடையாள ஆவணமாக ஆதாரை ஏற்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் மூன்றாவது முறையாக திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஆனால், தகுதியுள்ள வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் பெயரைப் பதிவு செய்வதற்கு தோ்தல் ஆணையம் தொடா்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

அரசியல் கட்சிகள் சாா்பில் நியமிக்கப்பட்ட முகவவா்களை (பிஎல்ஏ) அங்கீகரிக்க தோ்தல் ஆணையம் மறுப்பதோடு, ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்கவும் மறுப்பு தெரிவிக்கிறது. ஏற்கெனவே, குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களை மட்டும் வாக்காளா்களின் அடையாள ஆவணங்களாக ஏற்குமாறு தோ்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.

பிகாரில் தோ்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தோ்தல் ஆணையத்தையும் தலைமைத் தோ்தல் ஆணையரையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதற்காக தோ்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டாா்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT