பிரதமரின் பயணம்.. வளர்ச்சியின் புதிய அத்தியாயம்: ஒடிசா முதல்வர்!
பிரதமர் மோடியின் ஐந்து மாநில பயணம் குறித்து ஒடிசா முதல்வரின் கருத்து..
பிரதமர் மோடியின் ஐந்து மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், வேகத்திற்கு ஒரு சான்று என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார்.
மிஸோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளகிறார். இந்த மாநிலங்களில் மொத்தம் ரூ. 71,850 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியின் எக்ஸ் பதிவில்,
Advertisement
Advertisement
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு விரைவான மாற்றத்தின் சகாப்தத்தை கண்டு வருகிறது. பிரதமரின் 5 மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், வேகத்திற்கு ஒரு சான்றாகும்.
திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டுவது உள்ளடக்கிய விக்சித் பாரத் மீதான உறுதியான உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.
இந்த முயற்சிகள் உள்கட்டமைப்பை அதிகரிக்கும், இணைப்பை வலுப்படுததும், குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை திறப்பு விழாவுடன் மிசோரம் முதல் முறையாக இந்திய ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது, இது வரலாற்றில் என்றென்றும் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று மைல்கல், தேசிய ஒற்றுமை, ஒருங்கிணைப்பின் அடையாளமாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற ஒவ்வொரு முயற்சியிலும் இந்தியா வலிமையானது, ஆத்மநிர்பர் வளமானது என்ற தொலைநோக்குப் பார்வையை நெருங்கிறது என்று அவர் கூறினார்.
Odisha Chief Minister Mohan Charan Majhi on Saturday said Prime Minister Narendra Modi's five-state visit to Mizoram, Manipur, Assam, West Bengal and Bihar is "a testament to the scale and speed of progress across the nation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.