கோப்புப்படம். 
இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கால அவகாசம் இன்றே கடைசி!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றே கடைசி.

இணையதளச் செய்திப் பிரிவு

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று (செப். 15) முடிகிறது.

அபராதம் இன்றி ஐடிஆர் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வருமான வரிக் கணக்கு தாக்கல், வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளில் வரி செலுத்துவோருக்கு உதவ, 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

தொலைபேசி அழைப்புகள், எக்ஸ் வலைதளங்கள் மூலமும் வரி செலுத்துவோரின் சந்தேகங்களை வருமான வரித் துறை தீர்த்து வருகிறது.

2024-2025 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், செப். 15 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், வருமான வரி கணக்கை இன்று தாக்கல் செய்யவில்லையெனில், வருமானத்திற்கு அபராதம் வசூலிக்கப்படும்.

இதனிடையே, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவ. 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தவறான செய்தி பரவி வருவதாகவும், இந்தச் செய்தியில் உண்மை இல்லை எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அறிவுறுத்தியுள்ளது.

The deadline for filing income tax returns ends today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

மிகக்குறைந்த வயதில் எம்மி விருதை வென்ற அடோலசென்ஸ் நடிகர்!

விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட வேண்டாம்: சி. விஜயபாஸ்கர்

அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால்..! - ஓபிஎஸ் பேட்டி

SCROLL FOR NEXT