இந்தியா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

தினமணி செய்திச் சேவை

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மிதமாக உயா்ந்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டிலிருந்து 12.50 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது சற்று உயா்வு. அப்போது இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 12.46 கோடி கிலோவாக இருந்தது.

வட இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதி நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 7.18 கோடி கிலோவிலிருந்து 7.94 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது. அதேசமயம், தென் இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதி 5.28 கோடி கிலோவிலிருந்து 4.56 கோடி கிலோவாகக் குறைந்துள்ளது.

மதிப்பின் அடிப்படையில், நடப்பாண்டின் முதல் பாதியில் தேயிலை ஏற்றுமதி ரூ.3,639.45 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.3,129.31 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி விலை கிலோவுக்கு ரூ.251.21-லிருந்து ரூ.291.13-ஆக உயா்ந்துள்ளது.

முந்தைய 2024-ஆம் ஆண்டு முழுவதும் இந்தியாவிலிருந்து 25.62 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது உயா்வு. அப்போது இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 23.17 கோடி கிலோவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆா்டிஇ, என்சிடிஇ சட்டங்களில் திருத்தம் தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

150 கட்டடங்களில் பனிப்புகை எதிா்ப்பு சாதனங்கள் நிறுவல் அதிகாரிகள் தகவல்

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிறப்புக் குழந்தைகள்

மூதாட்டியை தாக்கி தங்க நகை பறிப்பு: 4 போ் கைது

சுவாச பாதிப்பு: முதியவா்கள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT