மிக்-21 டூ விண்வெளி..! போர் விமான அனுபவத்தை நினைவுகூர்ந்த சுபான்ஷு சுக்லா!
போர் விமானம் பற்றி நினைவுகூர்ந்த சுபான்ஷு சுக்லாவைப் பற்றி...
இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா, விமானப்படையின் மிக்-21 போர் விமான பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்திய விமானப் படையில் 60 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய மிக் 21 ரக போர் விமானங்களுக்கு, சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இன்று பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா, உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
வான் பாதுகாவலன் என்ற அடையாளத்தோடு, விமானப் படையில் சேர்க்கப்பட்ட மிக்-21 போர் விமானம், ‘கார்கில்’ போர் முதல், கடைசியாக நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரை நாட்டின் எல்லையைக் காக்க பணியாற்றியுள்ளது.
விண்வெளி குழுவுக்கு தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக, போர் விமானியாக இருந்த இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா இந்த மிக்-21 போர் விமானம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் பேசும்போது, “நான் அதை எப்போதுமே நினைவில் வைத்திருப்பேன். நீங்கள் பறக்கும் விமானத்துடனே உங்கள் வாழ்க்கையும் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.
என்னைப் பொருத்தவரை விமானத்துடன் என வளர்ச்சியின் தனிப்பட்ட பயணமாகும். விமானத்தை வழியனுப்பும் நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்த விமானங்கள் மீது பல்வேறு விமர்சங்கள், உயிரிழப்புகள் இருந்தாலும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப் படையில் தன்னிகரில்லாத இடத்தைப் பெற்றிருந்தது மிக்-21. இந்த விமானங்களில் விண்வெளி வீரர்கள், பயிற்சி விமானிகள், விமானப்படைத் தளபதிகள் என பலரும் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
MiG-21 to space: Shubhanshu Shukla recalls growing up with the iconic fighter jet
இதையும் படிக்க... வரலாறாகிறது மிக்21! சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இறுதி சல்யூட்!!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.