இண்டிகோ விமானம் 
இந்தியா

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து தலைநகர் தில்லிக்கு இன்று காலை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்று காலை மும்பையிலிருந்து தில்லிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 762இல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் தில்லி விமானத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

முன்னதாக செப். 19 அன்று, மும்பையிலிருந்து ஃபூக்கெட்டுக்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையில் இது புரளி என்று தெரியவந்தது.

A security threat was noticed in a Delhi-bound IndiGo flight from Mumbai on Tuesday, an IndiGo spokesperson said. The aircraft was cleared for flight after necessary security checks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: தலைமறைவாக இருந்தவர் கைது!

யுரேனியம் செறிவூட்டப்படவில்லை: ஈரான் வெளியுறவு அமைச்சா் விளக்கம்!

முன்மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

அதிமுக மாணவா் அணி சாா்பில் மடிக்கணினி வழங்கும் விழா

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

SCROLL FOR NEXT