முகப்பு
இந்தியா

சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ. 71.1 லட்சம் மோசடி!

சிபிஐ அதிகாரிபோல் நடித்து தாணே நபரிடம் பல லட்சம் மோசடி செய்தது பற்றி..

Updated On : 4 ஏப்ரல், 2026 at 5:57 AM
சைபர் மோசடி
பகிர்:

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து நபர் ஒருவரிடம் ரூ. 7.11 லட்சத்தை மோசடி செய்ததாகக் காவல்துறை தெரிவித்தனர்.

காவல்துறையின் தகவலின்படி,

தாணேவில், டோம்விவிலியைச் சேரந்த 42 நபருக்கு மார்ச் முதல் வாரத்தில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் தெரியாத நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது

Advertisement

அவரிடம் அந்த நபர், பெண்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், அதுதொடர்பாக காட்கோபர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, அவரது வங்கிப் பரிவர்த்தனைகள் மோசடி நடவடிக்கைகளைக் காட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் விசாரிக்கும் என போலி நபர்கள் கூறினர். தாங்கள் சொல்வது உண்மை என்று நம்பவைக்க உச்ச நீதிமன்றத்திலிருந்து வந்தவை எனப் போலி ஆவணங்களையும் பாதிக்கப்பட்ட நபருக்கு அனுப்பினர்.

இந்த வழக்கை முடித்துவைப்பதற்காக, பாதிக்கப்பட்டவரிடம் தவணை முறையில் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர், அந்தத் தொகை தவணை முறையில் திரும்ப அளிக்கப்படும் என உறுதியளித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளன.

பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இணையவழிப் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ. 71.1 லட்சத்தை அந்த மோசடியாவார்களுக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்தார். இந்த தகவலைப் பாதிக்கப்பட்ட நபர் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களைத் தனது மனைவியிடம் பகிர்ந்துகொண்ட பின்னரே, அவரது மனைவி அந்த மோசடியாவார்களிடம் கேள்விகள் எழுப்பியதுடன், அவர்கள் அனுப்பிய ஆவணங்களையும் சரிபார்த்தார்.

ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்ததும், தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை அந்தக் குடும்பத்தினர் உணர்ந்தனர்.

இதையடுத்து, திலக் நகர் காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

summary

Cyber fraudsters posing as CBI officers allegedly duped a 42-year-old man from Maharashtra's Thane district of Rs 71.1 lakh after threatening to implicate him in a false case of harassment, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments