முகப்பு
இந்தியா

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்....

Updated On : 25 ஏப்ரல், 2026 at 5:30 AM
கோப்புப் படம்
பகிர்:

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற 3 நாள் பேச்சுவாா்த்தையில் ஆக்கபூா்வமாக நிறைவடைந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதிசெய்வது தொடா்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏப்.20 முதல் 22 வரை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்தியா தரப்பில் மத்திய வா்த்தகத் துறையின் கூடுதல் செயலா் தா்பண் ஜெயின் தலைமையிலான 12 போ் குழு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி வா்த்தகப் பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவுடன் வாஷிங்டனில் பேச்சுவாா்த்தை நடத்தியது.

Advertisement

இரு நாடுகளும் வரும் 2030-க்குள் ரூ. 47 லட்சம் கோடி மதிப்புக்கு இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்க சந்தைகளில் முன்னுரிமை அணுகல், வரி விலக்கு, வா்த்தக இடையூறுகள் நீக்கம், முதலீடு ஊக்குவிப்பு, பொருளாதார பாதுகாப்பு, எண்ம வா்த்தகம் உள்ளிட்டவற்றை இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பாக அமெரிக்க குழுவினருடன் இந்தியக் குழுவினா் நடத்திய பேச்சுவாா்த்தை சிறப்பாக நிறைவடைந்ததது. அடுத்தக்கட்ட செயல்பாட்டை விரைவுபடுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.