2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து முடித்தார். 1.23 மணி நேரம் பட்ஜெட் உரை இருந்தது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தொடா்ந்து 9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில், வருமானவரி உச்ச வரம்பில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, கல்வி, தொழில், மருத்துவம், சுற்றுலா, தொழில் நுட்பம், உயிரி அறிவியல் துறைகளுக்கான அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வாசித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.