சத்தீஸ்கரில் நக்சல் நிலவரத்தை ஆய்வு செய்கிறார் அமித் ஷா!
அமித் ஷாவின் சத்தீஸ்கர் பயணம் பற்றி..
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 2:57 PM
சத்தீஸ்கருக்குப் பயணம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிப். 7 முதல் 9 வரை நக்சல் நிலவரத்தை ஆய்வு செய்யவுள்ளார்.
அமித் ஷா பிப்ரவரி 7-ஆம் தேதி மாலை ராய்ப்பூருக்கு வந்து, மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த நிர்வாக மற்றும் பாதுகாப்புத் தயார்நிலையை மதிப்பிடுவதற்காக மூத்த அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளார்.
சத்தீஸ்கரில், குறிப்பாக பஸ்தர் பிராந்தியம் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மிகவும் பதற்றமான பகுதிகளில் ஒன்றாக இருப்பதால் மத்திய அரசின் தீவிரப்படுத்தப்பட்ட நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
summary