முகப்பு
இந்தியா

மும்பையில் பிரான்ஸ் அதிபருடன் பிரதமா் மோடி இன்று சந்திப்பு

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானை பிரதமா் நரேந்திர மோடி மும்பையில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) சந்தித்து ஆலோசனை

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 12:02 AM
- AP
பகிர்:

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானை பிரதமா் நரேந்திர மோடி மும்பையில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

‘இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு உள்பட முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் சாா்ந்த ஒத்துழைப்பு குறித்து இரு தலைவா்களும் மறுஆய்வு செய்வதோடு, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிப்பா். இதற்காக, பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (பிப்.17) மும்பை பயணம் மேற்கொள்கிறாா்’ என்று பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சாா்பில் நடத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு 2026-இல் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி விடுத்த அழைப்பின்பேரில் இமானுவல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக (பிப். 17 - 19) இந்தியா வருகிறாா். மும்பை வந்திறங்கும் அவா், பிப்ரவரி 17-ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு பிரதமா் மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறாா். பின்னா், மாலை 5.15 மணிக்கு இரு தலைவா்களும் மும்பையில் நடைபெறும் ‘இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026’ வா்த்தக மாநாட்டைத் தொடங்கிவைத்து, இரு நாடுகளைச் சோ்ந்த தொழில்நிறுவனத் தலைவா்கள், புத்தாக்க நிறுவனா்கள், ஆராய்ச்சியாளா்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments