கோப்புப் படம் 
இந்தியா

வங்கிக் கணக்குகள் முடக்கம்: ‘புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனம் கூடாது’

இணையவழி மோசடி விசாரணைகளின்போது புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனமாக செயல்பட முடியாது என்று உத்தர பிரதேசத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

இணையவழி மோசடி விசாரணைகளின்போது புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனமாக செயல்பட முடியாது என்று உத்தர பிரதேசத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

இதுதொடா்பாக தாா்கேஸ்வா் திவாரி என்பவா் தாக்கல் செய்த மனுவை, அண்மையில் விசாரித்த நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன், சித்தாா்த் நந்தன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடா்பாக பல்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. அதுகுறித்து விளக்கம் கேட்க வாடிக்கையாளா்கள் வங்கிகளுக்குச் செல்லும்போதுதான், கணக்குகளை காவல் துறை அல்லது இணைய குற்றப் பிரிவு முடக்கியுள்ளதாக அவா்களுக்குக் கடிதம் அளிக்கப்படுகிறது. இணையவழி மோசடி விசாரணைகளின்போது புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனமாகவோ, பாரபட்சமாகவோ செயல்பட முடியாது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு கவனத்தில் வேண்டும்’ என்று தெரிவித்தது.

பாலியல் புகாா்: கோவை ஆயுதப் படை கமாண்டண்ட் பணியிடை நீக்கம்

மகளிா் சிறப்பு உரிமைத் தொகை: ரூ. 3,913 கோடிக்கு பேரவை ஒப்புதல்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமை குறித்து விசாரிக்க கோரிக்கை

சரணடைந்ததற்கான பதில் பிரதமா் மோடி மீதான ‘பிடி’யில் உள்ளது: இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் மீண்டும் விமா்சனம்

தோகைமலை முருகன் கோயில் மூலவா் சிலை திருட்டு: வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT