முகப்பு
இந்தியா

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

தில்லியில் ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:21 AM
கைது செய்யப்பட்ட உதய் பானு சிப்
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:09 AM

தில்லியில் ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார்.

புதுதில்லியில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு, பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸார், மாநாட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழற்றி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

Advertisement

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:19 AM

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளர் கிருஷ்யா ஹரி, பிகார் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் குந்தன் யாதவ், உத்தரப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அஜய் குமார், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவரான உதய் பானு சிப்பும் கைது செய்யப்பட்டுள்ளார்.

summary

Youth Congress Chief Uday Bhanu Chib Arrested Over Shirtless Protest During India AI Impact Summit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.