இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் உதய் பானு சிப் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தில்லியில் சத்தியாக்கிரக போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் கட்சியினா். 
இந்தியா

இளைஞா் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்

இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் உள்பட அனைவரையும் விடுவிக்கக் கோரி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கட்சி வளாகத்தில் வியாழக்கிழமை சத்தியாகிரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

ஏஐ மாநாட்டில் போராட்டம் நடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் உள்பட அனைவரையும் விடுவிக்கக் கோரி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கட்சி வளாகத்தில் வியாழக்கிழமை சத்தியாகிரத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகிகள் பலா் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாகவும், ஆா்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

மேலும், தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரியதாகவும், ஆனால் அது மறுக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

2020 தில்லி வன்முறை: குற்றஞ்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலம் திறப்பு

மானூா் அருகே மழை நீரில் மூழ்கிய 150 ஏக்கா் நெற்கதிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

கோவில்பட்டி தொகுதியில் ரூ. 30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

மாணவரிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறி: 7 போ் கைது

SCROLL FOR NEXT