ANI
இந்தியா

மும்பை: 18 மாடி குடியிருப்பு கட்டடத்தில் திடீர் தீ விபத்து

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள 18 மாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பீதி நிலவியது.

தினமணி செய்திச் சேவை

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள 18 மாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பீதி நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள 18 மாடி குடியிருப்புக் கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்டது. முதல் மாடியில் இருந்து நான்காவது மாடி வரை தீப்பிழம்புகள் பரவியதால் கட்டடத்திற்குள் அடர்ந்த புகை பரவியது.

தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் இருந்து ஒன்பது குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதே நேரத்தில் 18 பேர் படிக்கட்டு வழியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

புகையை சுவாசித்து பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாலை 4.35 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேசமயம் தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

மூன்று மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

As many as 27 persons were rescued after a fire broke out at an 18-storey residential building in Mumbai's Andheri area on Saturday afternoon, civic officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT