மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் பாஜக: இம்ராம் பிரதாப்கர்ஹி குற்றச்சாட்டு!
மத பிளவுகளால் மக்களைப் பிரிக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு பற்றி..
பாஜகவினர் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்த முயல்வதாகக் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இம்ராம் பிரதாப்கர்ஹி குற்றம் சாட்டியுள்ளார்.
மாநகராட்சித் தேர்தலையொட்டி நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது, விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் நிலையில், தாராவி போல மும்பையை விற்றுவிட ஒருபோதும் அனுமதிக்கப்படாது.
மும்பை மகாராஷ்டிலத்திற்குச் சொந்தமானது, அது எப்போது அந்த மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும். பாஜகவின் அரசியல் மக்களைப் பிளவுபடுத்துவதையும், அவர்களுக்குக் கல்வி மறுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
Advertisement
Advertisement
பாஜக பிளவுபடுத்தி ஆளும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெறுப்புச் சூழல் உருவாக்கப்படுகிறது. பாஜக அமைச்சர்கள் பிளவுபடுத்தும் மொழியைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் மூத்த தலைவர்கள் மௌனம் காக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
Congress's Rajya Sabha member Imran Pratapgarhi has accused the BJP of adopting a "divide and rule" policy.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.