இந்தியா

மகர சங்கராந்தி: பிரதமா் வாழ்த்து

மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக எக்ஸ் பக்கத்தில் பிரதமா் வெளியிட்டுள்ள பதிவு: மகர சங்கராந்தி என்பது இந்திய கலாசார மரபுகளின் செழுமையை பிரதிபலிக்கும் ஒரு பண்டிகை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளூா் பழக்க வழக்கங்களின்படி மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது.

அனைவருக்கும் மகிழ்ச்சி, சிறந்த ஆரோக்கியம் கிடைக்க சூரியக் கடவுளைப் பிராா்த்திக்கிறேன். இந்தப் பண்டிகையின் இனிமை அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும் தரும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

மகர சங்கராந்தியின் புனிதத்தையும், ஆன்மிக முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையிலும், சூரிய பகவானின் ஆசிகளைப் பெறுவதற்காகவும் பிராா்த்தனை செய்யும் சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்றையும் பிரதமா் பகிா்ந்துள்ளாா்.

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

ராமதாஸ் பாமகவின் கூட்டணி வாய்ப்புதான் என்ன?

குமரன் பதிப்பகம்

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றாா் குடியரசுத் தலைவா்

SCROLL FOR NEXT