பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் 
இந்தியா

பயங்கரவாதிகள் மறைவிடங்களில் சிலிண்டர், சமையல் எண்ணெய் உள்பட பல பொருள்கள் கண்டெடுப்பு!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு பொருள்கள் கண்டெடுப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தகவலின்பேரில், ஜன. 7-ல் பிலாவர், கலாபான், தானு பரோல், கமாத் நல்லா வனப்பகுதியில் பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையின்போது, பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பில்லாவரின் காளிகாட் மற்றும் கலாபான் பகுதிகளில் இன்று தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தது.

பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள்

இன்றைய தேடுதல் நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாத மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இடங்களில் பல்வேறு பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன.

சமையல் எரிவாயு சிலிண்டர், சமையல் எண்ணெய், சார்ஜ் வயர், கையுறைகள், சமையல் பாத்திரங்கள், காலியான எண்ணெய் கலன்கள், நெகிழிப் பைகள், போர்வைகள், உணவுப் பொருள்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் தாள்கள், டார்ச் லைட் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

J&K: Security forces bust three terrorist hideouts in Kathua’s Billawar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸுக்கு 5 மேயர்கள் - காங். தலைமை

கிரீன்லாந்து ஆக்கிரமிப்புக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி: டிரம்ப்

ஈரானில் உள்ள சுமார் 9,000 இந்தியர்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை: வெளியுறவு அமைச்சகம்

நிவின் பாலியின் பேபி கேர்ள் டிரைலர்!

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் இரு நடிகைகள்?

SCROLL FOR NEXT