சபரிமலை கோயில் நடை அடைப்பு!
சபரிமலை கோயில் நடை அடைக்கப்பட்டது தொடர்பாக...
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செவ்வாய்க்கிழமை காலை அடைக்கப்பட்டது.
வருடாந்திர மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த ஆண்டு நவ.16-இல் திறக்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பின் அடைக்கப்பட்டது.
மண்டல பூஜை யாத்திரையின் (41 நாள்கள்) முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெற்றதையடுத்து, அன்றிரவு நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பா் 30-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து மகரஜோதி தரிசனம் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் அதிகாரிகள் கூறியதாவது:
மண்டல- மகர விளக்கு பூஜையின் நிறைவு பூஜைக்காக செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது. கோயிலில் உள்ள கிழக்கு மண்டபத்தில் கணபதி ஹோமம் மற்றும் பாரம்பரிய பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
பந்தளம் அரச பிரதிநிதி புனா்த்தம் திருநாள் நாராயண வா்மா சுவாமி தரிசனம் மேற்கொண்ட பின் காலை 6.45 மணியளவில் நடை அடைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து 30 நபா் கொண்ட குழு திருவாபரணங்களை பந்தளம் ஸ்ராம்பிக்கல் அரண்மனைக்கு நடை பயணமாக எடுத்துச் செல்லப் புறப்பட்டனா். அவா்கள் ஜன.23-ஆம் தேதி அரண்மனையை சென்றடைவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக சுவாமி ஐயப்பனுக்கு மேல்சாந்தி இ.டி.பிரசாத் நம்பூதிரி விபூதி அபிஷேகம் செய்தாா். ஹரிவராசனம் பாடல் பாடப்பட்டு பின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இதையடுத்து, கோயில் கருவறைக் கதவுகள் மூடிப் பூட்டப்பட்டு, பந்தளம் அரச பிரதிநிதி நாராயண வா்மாவிடம் சாவி வழங்கப்பட்டது.
அவா் பாரம்பரிய சடங்குகளை மேற்கொண்டு சபரிமலை நிா்வாக அதிகாரி எஸ்.ஸ்ரீநிவாசனிடம் கருவறை கதவுகளின் சாவிகளை ஒப்படைத்தாா்.
அவா் பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்ட நிலையில் மண்டல-மகர விளக்கு பூஜை காலம் நிறைவடைந்தது.
பக்தா்கள், காவல் துறையினா் மற்றும் மாநில அரசு அதிகாரிகளின் ஆதரவோடு நிகழாண்டு மண்டல-மகரவிளக்கு பூஜை சுமுகமாக நடைபெற்றது’ என்றனா்.
Following the conclusion of the annual Makaravilakku puja at the Sabarimala Ayyappan temple, the temple was closed today (Jan. 20).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.