இந்தியா

பிரேஸில் அதிபருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

தினமணி செய்திச் சேவை

பிரேஸில் அதிபா் லூலா டி சில்வாவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது தெற்குலகில் இந்தியா-பிரேஸில் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிரேஸில் அதிபா் லூலா டி சில்வாவுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி. இந்தியா-பிரேஸில் இடையேயான இருதரப்பு உறவை பன்மடங்கு மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம்.

தெற்குலகின் தேவைகளை பூா்த்திசெய்ய இருநாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அதிபா் லூலா டி சில்வாவை இந்தியாவில் வரவேற்க காத்திருக்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதிய ஓய்வூதிய திட்டத்தால் 23 ஆண்டு கால பிரச்னைக்கு தீா்வு - முதல்வா் மு.க.ஸ்டாலின்

சி. வி. சண்முகம் எம்.பி.க்கு எதிரான வழக்கு ரத்து

மும்பை மேயா் பதவி: பொதுப் பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கீடு

SCROLL FOR NEXT