முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெ கௌடா - பிரதமர் மோடி எக்ஸ்
இந்தியா

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெ கௌடாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெ கௌடாவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி. தேவெ கௌடாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன. 29) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியதாவது, முக்கிய விவகாரங்களில் ஹெச்.டி. தேவெ கௌடாவின் ஆழமான சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவை எனவும், இந்தியாவின் வளர்ச்சியில் அவரது ஆர்வம் பாராட்டத்தக்கது எனவும் அவர் கூறியுள்ளார்.

இத்துடன், முன்னாள் பிரதமர் தேவெ கௌடா கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பிரதமர் மோடி கன்னடத்தில் தனது எக்ஸ் தளப் பதிவை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, கர்நாடகத்தின் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து ஹெச்.டி. தேவெ கௌடா மற்றும் அவரது மகனும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ஹெச்.டி. குமாரசாமி ஆகியோர் அவர்களது சொந்த ஊரான ஹாசனில் மாபெரும் பேரணியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஹெச்.டி. தேவெ கௌடா இடையிலான இந்தச் சந்திப்பு மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

Prime Minister Narendra Modi met and held discussions with former Prime Minister H.D. Deve Gowda.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-ம் நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆனால் ஐடி, ஆட்டோ, பார்மா பங்குகள் சரிவு!

நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

சாம்பியன்ஸ் லீக்கில் 100% வெற்றியுடன் வரலாறு படைத்த ஆர்செனல்!

யு19 உலகக் கோப்பை: ஜோரிச் வான் சதம் விளாசல்; இலங்கைக்கு 262 ரன்கள் இலக்கு!

தனுஷின் 55 ஆவது படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

SCROLL FOR NEXT