முகப்பு
இந்தியா

பிரதமர் மோடி நாளை பஞ்சாப் பயணம்!

ஆதம்பூர் விமான நிலையத்தின் பெயர் மாற்றம் - பெயர்ச்சூட்டுவிழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி!

Updated On : 31 ஜனவரி, 2026 at 6:29 AM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை(பிப். 1) பஞ்சாப் மாநிலத்துக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார்.

அங்குள்ள ஆதம்பூர் விமான நிலையத்தைப் பகல் 3.45 மணிக்குப் பார்வையிடும் அவர், அந்த விமான நிலையத்துக்கு புதிய பெயர்ச்சூட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ‘ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி விமான நிலையம்’ எனும் பெயரை அந்த விமான நிலையத்துக்குச் சூட்டுகிறார்.

பஞ்சாபில் புகழ்பெற்ற ஆன்மிக குரு, குரு ரவிதாஸ் ஜியின் 649-ஆவது பிறந்த நாளையொட்டி அன்னாரது சமூக சீர்திருத்தத் தொண்டைக் கௌரவிக்கும் பொருட்டு விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து, பஞ்சாபின் லூதியாணாவில் உள்ள ஹல்வாரா விமான நிலையத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தையும் அவர் தொடக்கி வைக்கிறார்.

summary

Prime Minister Shri Narendra Modi will visit Punjab on 1st February, 2026.

முழு கட்டுரையைப் படிக்க →