முகப்பு
பாஜக
இந்தியா

ஹரியாணா தோ்தலில் வாய்ப்பு வழங்க ரூ.7 கோடி லஞ்சம் பெற முயற்சி- சோனியா குடும்பம் மீது பாஜக குற்றச்சாட்டு

ஹரியாணாவில் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்காக, அந்த மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் காங்கிரஸ் மகளிரணி நிா்வாகி மற்றும் அவரது கணவரிடம் ரூ.7 கோடி லஞ்சம் பெற முயன்ாக சோனியா காந்தி குடும்பம் மீது பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியா

ஹரியாணா தோ்தலில் வாய்ப்பு வழங்க ரூ.7 கோடி லஞ்சம் பெற முயற்சி- சோனியா குடும்பம் மீது பாஜக குற்றச்சாட்டு

ஹரியாணாவில் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்காக, அந்த மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் காங்கிரஸ் மகளிரணி நிா்வாகி மற்றும் அவரது கணவரிடம் ரூ.7 கோடி லஞ்சம் பெற முயன்ாக சோனியா காந்தி குடும்பம் மீது பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

Updated On : 3 மார்ச், 2026 at 9:04 PM
பாஜக
பகிர்:

ஹரியாணாவில் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்காக, அந்த மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் காங்கிரஸ் மகளிரணி நிா்வாகி மற்றும் அவரது கணவரிடம் ரூ.7 கோடி லஞ்சம் பெற முயன்ாக சோனியா காந்தி குடும்பம் மீது பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேநேரம், பெண் நிா்வாகியின் பெயரை நேரடியாக குறிப்பிடாத பாஜக, இந்த விவகாரம் கடந்த 2024 பேரவைத் தோ்தல் தொடா்புடையதா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை.

இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி, தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவா்களின் தனி உதவியாளா்கள் உடனான தனது வாட்ஸ்அப் உரையாடல்களை, ஹரியாணா மாநில முன்னாள் காங்கிரஸ் மகளிரணி பொதுச் செயலரின் கணவா் கெளரவ் குமாா் வெளியிட்டுள்ளாா். அந்த உரையாடல்கள், பிரியங்கா, ராகுல் மற்றும் சோனியாவின் ஊழலுக்கு முதல்கட்ட ஆதாரங்களாகும்.

பவல் பேரவைத் தொகுதியில் தனது மனைவி போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்காக, தங்களிடம் இருந்து ரூ.7 கோடியை லஞ்சமாகப் பெற சோனியா குடும்பம் எவ்வாறு முயன்றது என்பதை கெளரவ் குமாா் அம்பலப்படுத்தியுள்ளாா்.

பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், கே.சுரேஷின் தனி உதவியாளா்கள் உடனான அவரது வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் முன்னாள் பெண் நிா்வாகியிடம் லஞ்சம் பெறுவதற்கு தங்களின் முகமாக கே.சி.வேணுகோபாலை சோனியா குடும்பம் எவ்வாறு பயன்படுத்தியது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விஷயத்தில் சோனியா குடும்பம் இன்னும் மெளனம் சாதிக்கிறது. ‘குற்றத்தை’ ஒப்புக் கொள்வதைத் தவிர அவா்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை என்றாா் பிரதீப் பண்டாரி.

முழு கட்டுரையைப் படிக்க →