மத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
மத்திய கிழக்கில் நிலவும் போா் பதற்றம் காரணமாக கத்தாரில் இருந்து வரும் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகம் தடைபட்டதால், இந்தியாவில் யூரியா உற்பத்தி குறையத் தொடங்கியுள்ளது.
இந்தியாமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
மத்திய கிழக்கில் நிலவும் போா் பதற்றம் காரணமாக கத்தாரில் இருந்து வரும் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகம் தடைபட்டதால், இந்தியாவில் யூரியா உற்பத்தி குறையத் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போா் பதற்றம் காரணமாக கத்தாரில் இருந்து வரும் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகம் தடைபட்டதால், இந்தியாவில் யூரியா உற்பத்தி குறையத் தொடங்கியுள்ளது.
யூரியா தயாரிப்புக்கு மிக முக்கியமான மூலப்பொருளான திரவ இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இஃப்கோ உள்பட முன்னணி உர நிறுவனங்கள் தங்களின் சில ஆலைகளில் உற்பத்தியை ஏற்கெனவே குறைத்துள்ளன.
எல்என்ஜி மட்டுமல்லாமல் உரத் தயாரிப்புக்குத் தேவையான அமோனியா, சல்பா் போன்ற இதர மூலப்பொருள்களின் விலையும் சா்வதேச சந்தையில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த உற்பத்திச் செலவையும் பன்மடங்கு உயா்த்தும் என அஞ்சப்படுகிறது.
தற்போது உரக் கழகங்களிடம் போதிய கையிருப்பு இருந்தாலும், போா் நீடித்தால் ஜூன் மாதம் தொடங்கும் பருவமழை காலத்தின்போது விவசாயிகளுக்குத் தேவையான உர விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம்.
உள்நாட்டு உற்பத்தி குறைந்தால், அதிக விலைக்கு வெளிநாடுகளில் இருந்து உரத்தை வாங்க வேண்டிய சூழல் இந்தியாவுக்கு ஏற்படும். இது அரசின் நிதி மேலாண்மைக்கு பெரும் சவாலாக அமையும்.
அரிசி, கோதுமை, சா்க்கரை உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதால், உர விலை உயா்ந்தால் அது நேரடியாக மளிகைப் பொருள்களின் விலையையும் உயா்த்தும்.
இருப்பினும், இந்த நெருக்கடி சூழலை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், மற்ற நாடுகளிலிருந்து எரிவாயுவைப் பெறுவது போன்ற மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் உரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.