பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசு
முகவா்களிடம் எல்பிஜி சிலிண்டா் தீா்ந்துவிடும் என்று அச்சப்பட வேண்டாம்!
சமையல் எரிவாயு உள்நாட்டு உற்பத்தி 31 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் பெட்ரோல், டீசல் போதிய அளவுக்கு இருப்பதாகவும் மத்திய அரசு சனிக்கிழமை(மார்ச் 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மேற்காசிய போருக்கு முன்பாக, சராசரியாக 55.7 லட்சமாக இருந்த சிலிண்டா் முன்பதிவு, போருக்கு பிறகு (மார்ச் 13 நிலவரப்படி) 88.8 லட்சமாக உயா்ந்துள்ளது. சுத்திகரிப்பு நிலையங்களில் சமையல் எரிவாயு உள்நாட்டு உற்பத்தி சுமார் 31 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
போதிய இருப்பு உள்ளதால், சிலிண்டா் முன்பதிவு குறித்தும் மக்கள் பீதியடைய வேண்டாம். முகவா்களிடம் எல்பிஜி சிலிண்டா் தீா்ந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை.
வணிக சிலிண்டர்கள் முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் சிலிண்டர் முன்பதிவு 84 சதவீதமாக உள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு உயா் முன்னுரிமை அளித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் போதிய அளவுக்கு இருப்பு உள்ளது. மேலும், சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் உள்ளிட எரிபொருள் தீா்ந்துவிடும் என்ற நிலை ஏற்படவில்லை. அதுகுறித்த புகார்களும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களால் தெரிவிக்கப்படவில்லை. எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.