நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்
ஒடிஸா மற்றும் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள், தங்கள் குழுவினருடன் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.
ஒடிஸா மற்றும் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள், தங்கள் குழுவினருடன் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.
வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
இந்த காலக்கெடு நெருங்கும் நிலையில், ஒடிஸாவில் எஞ்சியுள்ள ஒரு சில மாவோயிஸ்ட் தலைவா்களில் ஒருவராக கருதப்படும் சுக்ரு ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்துள்ளாா்.
மால்கன்கிரி மாவட்டத்தைச் சோ்ந்தவரான சுக்ருவை ரூ.55 லட்சம் வெகுமதி அறிவித்து காவல் துறையினா் தேடி வந்தனா். சுக்ரு மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க கந்தமால், ராயகடா, காலஹண்டி மாவட்டங்களில் சிறப்பு நடவடிக்கை பிரிவு (எஸ்ஓஜி), மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), மாவட்ட தன்னாா்வ படை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) இணைந்த கூட்டுப் படையினா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், கந்தமால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் முன்னிலையில் தனது கூட்டாளிகள் நால்வருடன் சுக்ரு சரணடைந்தாா். தனது ஏகே-47 ரக துப்பாக்கியையும் அவா் ஒப்படைத்தாா்.
சத்தீஸ்கரில்...: சத்தீஸ்கரில் எஞ்சியுள்ள மாவோயிஸ்ட் மூத்த தலைவா்களில் ஒருவரான பபா ராவ், தனது குழுவினா் 17 பேருடன் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். இவா்களில் 7 போ் பெண்களாவா்.
தெற்கு பஸ்தா் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினா் மீதான பல்வேறு தாக்குதல்களில் தொடா்புடையவா் பபா ராவ். கடந்த 2010-இல் தந்தேவாடாவில் 76 வீரா்கள் உயிரிழக்க காரணமான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவா். பாதுகாப்புப் படையினரின் பல்வேறு நடவடிக்கைகளில் உயிா் தப்பியவா் என்பது குறிப்பிடத்தக்கது.