1,068 ஹெக்டேர் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு: ரயில்வே அமைச்சர்
சுமார் 1,068 ஹெக்டேர் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தது குறித்து...
சுமார் 1,068 ஹெக்டேர் பரப்பளவிலான ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) மாநிலங்களவையில் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் இந்திய ரயில்வேக்குச் சொந்தமான சுமார் 1,068 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் இது மொத்தமாக உள்ள 4.99 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் வெறும் 0.21 சதவீதம் மட்டுமே என்றும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே நிலங்களின் பயன்பாட்டைப் பார்த்தால், கிட்டத்தட்ட 80 சதவிகித நிலம் தண்டவாளங்களுக்கு அருகிலும், 5 சதவீத நிலம் அதைச் சுற்றியும் உள்ளது. மீதமுள்ள 15 சதவிகித நிலம் ரயில் நிலையங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் பிறவற்றின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார்.
மேலும்,நாட்டில் சுமார் 0.21 சதவிகித ரயில்வேக்கு சொந்தமான நிலம் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளது என்றும் மாநிலங்களவையில் பதிலுரைத்தார்.
Railway Minister Ashwini Vaishnaw informed the Rajya Sabha on Friday (March 27) that about 1,068 hectares of railway land is under encroachment.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.