நெதர்லாந்து பிரதமருடன் பிரதமா் மோடி பேச்சு!
பிரதமர் மோடி நெதர்லாந்து பிரதமருடன் உரையாடியது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து திங்கள்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவருடைய எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
“நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. இந்தியா - நெதர்லாந்து உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
குறைக்கடத்திகள், மாபெரும் நீர் திட்டங்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் திறமையாளர் இடப்பெயர்வு போன்ற துறைகளில் நமது கூட்டாண்மையின் சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தோம்.
மேலும், மேற்கு ஆசிய நிலவரம் குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதோடு, அப்பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போர் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.