கேரளத்தில் சைக்கிள் ஓட்டி ராகுல் காந்தி பிரசாரம்!
கேரளத்தில் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டியது குறித்து...
கேரள மாநிலம் கோட்டயத்தில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்ட பிறகு மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கேரளத்திற்கு இரண்டு நாள்கள் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி முதல் நாள் பயணத்தை சைக்கிள் ஓட்டி நிறைவு செய்தார்.
கேரளத்திற்கு ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி கேரளத்தில் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். முதல் நாளான இன்று பத்தினம்திட்டா, புதுப்பள்ளி, கோட்டயம் உள்ளிட்டப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.