முகப்பு
இந்தியா

கேரளத்தில் சைக்கிள் ஓட்டி ராகுல் காந்தி பிரசாரம்!

கேரளத்தில் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டியது குறித்து...

Updated On : 30 மார்ச், 2026 at 3:15 PM
மிதிவண்டி ஓட்டிச்செல்லும் ராகுல் காந்தி - பிடிஐ
பகிர்:

கேரள மாநிலம் கோட்டயத்தில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்ட பிறகு மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கேரளத்திற்கு இரண்டு நாள்கள் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி முதல் நாள் பயணத்தை சைக்கிள் ஓட்டி நிறைவு செய்தார்.

கேரளத்திற்கு ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி கேரளத்தில் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். முதல் நாளான இன்று பத்தினம்திட்டா, புதுப்பள்ளி, கோட்டயம் உள்ளிட்டப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

summary

Rahul Gandhi takes bicycle ride in Kottayam amid two-day intense Kerala campaigning

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.