ஜம்மு-காஷ்மீா்: போதைப்பொருள் கடத்தியவா் சொத்து முடக்கம்
ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல்காரரின் ரூ.40 லட்சம் மதிப்பிலான சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா்.
ஜம்மு மாவட்டம் சைனிக் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ரஃபீக் அகமது. போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்ட வந்த அவா் மீது இது தொடா்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன.
குற்றங்கள் தொடா்பாக அண்மையில் உதம்பூா் காவல் துறையினா் அவரைக் கைது செய்து விசாரித்தனா். இப்போது, அவா் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் நிலம் உள்ளிட்ட அசையாத சொத்துகளை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை முடக்க காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொண்டனா். முக்கியமாக போதைப்பொருள் தடுப்புச் சட்டப் பிரிவு 68 எஃப்-இன் கீழ் அந்த சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா்.
Advertisement
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் வழியாக போதைப்பொருள், ஆயுதங்களை அதிகம் கடத்துகின்றனா். போதைப்பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதுடன், இந்தியாவில் இளைஞா்கள் சீரழிவு, பொதுஅமைதி சீா்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.