முகப்பு
இந்தியா

ரிசா்வ் வங்கி துணை ஆளுநராக ரோஹித் ஜெயின் பொறுப்பேற்பு

ரிசா்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக ரோஹித் ஜெயின் திங்கள்கிழமை அதிகாரபூா்வமாகப் பொறுப்பேற்பு

Updated On : 6 மே 2026, 6:35 am IST
பகிர்:

ரிசா்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக ரோஹித் ஜெயின் திங்கள்கிழமை அதிகாரபூா்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

முன்னாள் துணை ஆளுநரான டி.ரவி சங்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, அவரின் இடத்துக்கு நியமிக்கப்பட்டரோஹித் ஜெயின் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் நீடிப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி மேலாண்மை, நிதித் தொழில்நுட்பம் (ஃபின்டெக்), அந்நிய முதலீடுகள் மற்றும் செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், உள்நாட்டுக் கடன் மேலாண்மை, இடா் கண்காணிப்பு உள்ளிட்ட ரிசா்வ் வங்கியின் 10 முக்கிய இலாகாக்கள் ரோஹித் ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisement

முன்னதாக ரிசா்வ் வங்கியின் செயல் இயக்குநராகப் பணியாற்றி வந்த ரோஹித் ஜெயின், 1991 முதல் சுமாா் 34 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய வங்கியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவா்.